கஞ்சா, போதை மாத்திரைகளுடன் இருவர் கைது..!

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி , சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் நேற்று காளப்பட்டி ரோட்டில் ஒரு கல்லூரி அருகே உள்ள காலி இடத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர்போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்தி பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 150 கிராம் கஞ்சா 100 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பீளமேடு டிஸ்பன்சரி ரோட்டை சேர்ந்த ராஜு மகன் தினகரன் (வயது 23) புலியகுளம் கருப்பராயர் கோவில் வீதியைச் சேர்ந்த ரத்தினகிரி மகன் சியாம் பெட்ரின் ( வயது 21) என்பது தெரிய வந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.