கோவை மக்களின் கவனத்திற்கு… அவினாசி சாலையில் கோர்ட்டு ரவுண்டானாவில் போக்குவரத்தில் திடீர் மாற்றம்.!!

கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையம் சிக்னலில் இருந்து தெற்குத் தாசில்தார் அலுவலகம் செல்லும் சாலை கோர்ட்டு செல்லும் சாலை ரயில் நிலையம் செல்லும் சாலை ஆகியவற்றில் சந்திப்பில் 2 ரவுண்டானாக்கள் உள்ளன. ரேஸ்கோர்ஸ் அரசு கலைக் கல்லூரி, கோர்ட்டில் இருந்து வரும் வாகனங்கள் கலெக்டர் அலுவலகம் கமிஷனர் அலுவலகம் மற்றும் உட்பிலிப்பாளையம் சிக்னல் செல்ல வேண்டும் என்றால் இந்த ரவுண்டானாவை கடந்து செல்ல வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த கோர்ட் நுழைவாசல்கள் 1, 2, 3,ஆகிய வாயில்கள் வழியாக செல்லும் வாகனங்களும்இந்த ரவுண்டானாவைகடந்து செல்ல வேண்டியது உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை காணப்பட்டது. இதனால் இங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபடுவார்கள் .இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தற்போது போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது இதன்படி 2 ரவுண்டனாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்தப் பகுதி இரும்பு தடுப்புகளால் மூடப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸ் மற்றும் அரசு கலைக் கல்லூரியில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா அண்ணா சிலை சிக்னல் செல்ல தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா சிலை சிக்னல் அல்லது ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் ரவுண்டானா அருகே சற்று இடதுபுறம் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பி செல்வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.