கார் , வேன் மோதல் : டிரைவர் சாவு – ஒருவர் படுகாயம்..

கோவை -சேலம் பைபாஸ் ரோட்டில் நேற்று வேனும் -காரும் மோதி கொண்டன .இதில் வேன் டிரைவர் சேலம் வாழப்பாடி பெல்லுர்,கோட்டைமேட்டைசேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) மற்றொரு டிரைவர் வாழப்பாடி வரதராஜ் (வயது 45) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் வேன் ஓட்டி வந்த சதீஷ்குமார் இறந்தார் . மற்றொரு டிரைவர் வரதராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக கார் ஓட்டி வந்த அஸ்வின் ராஜ் (வயது 24) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.