கோவையில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாடு கூட்டம்..!

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஒட்டலில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாடு கூட்டம் இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னையில் இருந்து ஐ.ஜி, எஸ்.பி. பங்கேற்றனர். கர்நாடகாவில் இருந்து ஒரு ஏ.டி.ஜி.பி 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பங்கேற்றனர் . டெல்லியி இருந்து என்.எச்.ஆர். சி உயர் அதிகாரிகள் 7 பேர் கலந்து கொண்டனர்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், 4 துணை கமிஷனர்கள் மற்றும் கோவை மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் இருந்து 42 எஸ்.பி.க்கள், ஏ.டி.எஸ்.பி.க்கள் பங்கேற்றனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு டிஜிபி சங்கர் ஜிவால் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்றார். அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கபட்டது. பிறகு சட்டம் -ஒழுங்கு, குற்றத் தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.