நகை வியாபாரியிடம் ரூ.51 லட்சம் கொள்ளை- வாலிபர் கைது..!

கோவை வைசியாள் வீதியை சேர்ந்தவர் அக் ஷய் ( வயது 28 ) நகை வியாபாரி. இவர் சேலம், பெங்களூர், உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று நகை வாங்கி வருவது வணக்கம். அதன்படி கடந்த மாதம் 9 – ந் தேதி நகை வாங்க சேலத்துக்கு செல்வதற்காக ரூ. 51 லட்சத்துடன் பைக்கில் காந்திபுரம் சென்று கொண்டிருந்தார். அவர் அவிநாசி ரோடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு தெரிந்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து திடீரென்று வழிமறித்தனர். பின்னர் அவர்கள் அக் ஷயை தாக்கி அவரிடம் இருந்த ரூ 51 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் வழிப்பறி செய்தவர்கள் அக்சயுடன் வேலை செய்து வந்த கிருஷ்ணா பட்டேல் ,அவருடைய நண்பர் விக்ரம் ஜம்பா யாதவ் ( வயது 28) என்பது தெரிய வந்தது.. தலைமறைவான அவர்கள் 2 பேரையும் பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் .இதை யடுத்து கோவை வந்து ஒரு வீட்டில் பதுங்கி இருந்த விக்ரம் ஜம்பா யாதவை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர் அப்போது அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது .உடனே போலீசார் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  இந்த வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணா பட்டேலை போலீசார் தேடி வருகிறார்கள்..