தங்கப்பட்டறை அதிபரை வெட்டி 270 கிராம் நகை கொள்ளை வழக்கில் மேலும் 5 பேர் கைது..!

கோவை செல்வபுரத்தில் உள்ள அருள் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். நகைப்பட்டறை அதிபர். இவரது பட்டறையில் சாந்தகுமார் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாத 22ஆம் தேதி 270 கிராம் தங்க நகைகளுடன் தனது மோட்டார் சைக்கிளில் சாந்த குமாரை ஏற்றிக் கொண்டு காந்திபுரம் பஸ் நிலையம் அருகே சென்றார் . அப்போது ராஜேந்திரன் சாந்தகுமார் ஆகியோரை ஒரு மர்ம கும்பல் வழிமறித்தது பின்னர் அவர்களை அரிவாளால் வெட்டி விட்டு 270 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்றது சிவகங்கையை சேர்ந்த ஹரிகரன் மதுரை சேர்ந்த தர்மராஜ், நந்தகோபால், சூரிய பிரகாஷ், சல்மான் அகமது என்பது தெரிய வந்தது . இவர்களை போலீசார் கைது செய்தனர். இதே வழக்கில் ஏற்கனவே 8 பேரை போலீசார் கைது செய்து குறிப்பிடத்தக்கது..