நடுரோட்டில் கோவை வாலிபருக்கு பீர்பாட்டில் குத்து – 2 பேர் கைது..!

கோவை புலியகுளம், போலீஸ் கந்தசாமி விதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் விஜய் ( வயது 25 )இவர் நேற்று புலியகுளத்தில் உள்ள திமுக கட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புலியகுளம், சிறு காளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஜாக்கி என்ற பிரதீப் குமார் (வயது 24 ) கருப்பராயன் அம்மன் குளத்தைச் சேர்ந்த உதய விக்ரம் (வயது 22) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜாக்கி என்ற பிரதீப் குமார், உதய விக்ரம் ஆகியோர் பீர் பாட்டிலை உடைத்து விஜய் மீது தாக்கினார்கள் .இதில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து இராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஜாக்கி என்ற பிரதிப்குமார், உதய விக்ரம் ஆகியோரை கைது செய்தனர் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.