குட்கா விற்ற வியாபாரிகள் 5 பேர் கைது..!

கோவை ஆர். எஸ். புரம் ,போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன்,சப் இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் மரக்கடை மில் ரோடு பகுதியில் நேற்று மாலையில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மில் ரோட்டை சேர்ந்த ரபீக் (வயது 54) கைது செய்யப்பட்டார். 6 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் முன் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக ரத்தினபுரி, பழனியப்ப கவுண்டர் வீதியைச் சேர்ந்த சத்யேந்திரன் ( வயது 43) சபரிநாதன் ( வயது 22) இடையர் வீதி நாராயணன் லால் ( வயது 41)செட்டி வீதி ஜோசப் (வயது 60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் . 4.5 கிலோ குட்கா பணம் ரு 27,020 பறிமுதல் செய்யப்பட்டது..