ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்கம் மோசடி- 2 நகை தொழிலாளிகளுக்கு வலைவீச்சு..!

கோவை ஆர். எஸ். புரம். தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 47) நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் வட மாநிலத்தைச் சேர்ந்த மான்சாடோலி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.. இவர் மூலமாக இவரது தம்பி லோகோ டோலி , அவரது நண்பர் பிஸ்வஜித் டோலி ஆகியோர் மணிகண்டனிடம் வேலைக்கு சேர்ந்தனர். இவர்களிடம் மணிகண்டன் 400 கிராம் தங்கத்தை கொடுத்து கம்மல் செய்து கொடுக்குமாறு கூறினார். அந்த தங்கத்துடன் இருவரும் எங்கோ மாயமாகிவிட்டனர். இதன் மதிப்பு ரூ 28 லட்சம் இருக்கும். இது குறித்து மணிகண்டன் ஆர். எஸ். புரம். போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகிறார்..