காதல் தோல்வியால் வடமாநில இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவரது மகன் சதாம் உசேன் ( வயது 18) சின்ன நெகமத்தில் உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் பெற்றோருடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இவர் அஸ்சாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்தப் பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். கடந்த 2 நாட்களாக அந்தப் பெண் இவருடன் பேசவில்லை. இதனால் மனமுடைந்த சதாம் உசேன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை அப்துல் ரஹீம் நெகமம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பானுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..