திருச்சியில் தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்பாட்டம்..!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து நிலைப் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேசுராஜ் தலைமை தாங்கினர். இந்த ஆர்பாட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையில் ஆசிரியர் பயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், கணக்காளர்கள், பொறியாளர்கள், தணிக்கை மேலாளர்கள், மற்றும் உதவியாளர்கள் உள்பட அனைவருக்கும் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளும் திரளாக கலந்து கொண்டனர். அடாத மலையிலும் விடாத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.