சூலூரில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று சூலூர் முத்து கவுண்டன் புதூர் அருகே வாகன சோதனை நடத்தினார்கள் . அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (வயது 45 )கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் (வயது 45) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா , இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..