கோவையில் ஒரே நாளில் 5 இளம்பெண்கள் திடீர் மாயம்..!

கோவை தெலுங்கு வீதியைச் சேர்ந்தவர் நந்தகோபால் . இவரது 15 வயது மகள் . 10-ம்வகுப்பு படித்து வந்தார். நேற்று இவர் வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து வெரைட்டி ஹால்ரோடு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதே போல மருதமலை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது 15 வயது மகள். 10-ம் வகுப்பு படித்து வந்தார் இவரும் நேற்று வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார்.

இதே போல திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஆலம்பாடி சேர்ந்தவர் ஆறுச்சாமி .இவரது மகள் ஹேமலதா ( வயது 20) கோவையில் உள்ள பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் .கல்லூரி விடுதியில் இருந்து கடந்த 7-ந்தேதி திடீரென்று மாயமாகிவிட்டார்.

கவுண்டம்பாளையம், அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது 17 வயது மகள்.அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தாராம். நேற்று திடீரென்று அந்த வாலிபருடன் எங்கோ மயமாகி விட்டார் .இது குறித்து அவர் தந்தை முருகேசன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் .இவரது மனைவி மைதிலி ( வயது 27 )இவர் நல்லாம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பள்ளிகூடத்துக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் மணிகண்டன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.