திருமணமான 3 மாதத்தில் புது பெண்ணுக்கு டார்ச்சர் -கணவர் மீது புகார்..!

கோவை சரவணம்பட்டி காளப்பட்டி பிரிவில் உள்ள கார்த்திக் நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் புவனேஸ்வரி ( வயது 25) இவருக்கும் அருண்குமார் (வயது 32) என்பவருக்கும் கடந்த 15 -2- 2024 அன்று தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் திருமணம் நடந்தது .3 மாதம் கழித்து இவர்கள் கோவைக்கு வந்து சரவணம்பட்டி கார்த்திக் நகரில் வசித்து வந்தனர்.அருண்குமார் சரிவர வேலைக்கு செல்வதில்லை. இந்த நிலையில் கணவரின் நடத்தையில் புவனேஸ்வரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் மற்றொருபெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தது. இதை அவர் தட்டிக் கேட்டார் . இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் மனைவியை மிரட்டி டார்ச்சர் செய்தாராம். இது குறித்து புவனேஸ்வரி கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கணவர் அருண்குமார் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..