புரோட்டாவுக்கு சால்னா கேட்டு கோவை ஓட்டல் அதிபருக்கு அரிவாள் வெட்டு – 2 பேருக்கு வலைவீச்சு.!!

கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில்வீதியில் ஓட்டல் நடத்தி வருபவர். ஏ. எஸ். அமானுல்லா (வயது 54)இவரது ஓட்டலுக்கு நேற்று கரீம், சமீர், ஆகியோர் புரோட்டா சாப்பிடசென்றனர்.அப்போது ஓட்டல் அதிபரிடம் சால்னா கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஓட்டல் அதிபரை அரிவாளால் வெட்டினார்களாம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உக்கடம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.போலீசார் கரீம், சமீர் ஆகியோர் மீது கொலை மிரட்டல், தாக்குதல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..