திருவள்ளூரில் அதிமுக மனித சங்கிலி போராட்டம்..!

திருவள்ளூரில் திமுக அரசை கண்டித்தும் முதல்வர் மு க ஸ்டாலினை கண்டித்தும் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே மனித சங்கிலி போராட்டம் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா தலைமையில் வெகு சிறப்பாகநடந்தது. இந்த மனித சங்கிலியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் ராம்குமார் நகர செயலாளர் கந்தசாமி உட்பட ஏராளமான கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். மனித சங்கிலியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க திருவள்ளூர் நகர காவல் துறை ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் உதவி ஆய்வாளர் ராக்கி குமாரி ஆகியோர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.