கிண்டல் செய்த ஆத்திரத்தில் உடன் வேலை செய்த நபரை கொலை செய்த குற்றவாளி கைது..!

நள்ளிரவில் 2.45 மணி அளவில் மாங்காடு லீலாவதி நகர் பரணி புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிஜே என்டர்பிரைசஸ் மரம் அறுக்கும் ஆலையில் அணில் பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் மாங்காடு போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி கே எம் சி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டு அணில் பாண்டே வயது 43. தகப்பனார் பெயர் ஜெகதீஷ் பாண்டே மற்றும் தினேஸ் திரி பாதி வயது 38. இரு வரும் கடந்த ஒரு வருடமாக சம்பவம் நடந்த இடமான பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான மரம் அறுக்கும் ஆலையில் தங்கி வேலை செய்து வந்ததாகவும் அதே ஆலையில் 10 நாட்களுக்கு முன்பாக வேலைக்கு சேர்ந்த குற்றவாளி குமார் வயது 48. தகப்பனார் பெயர் சுப் பையா டேங்க் தெரு கிண்டி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சென்னை. இருவரும் ஒன்றாக தங்கி வேலை செய்து வந்ததாகவும் இந்நிலையில் கொலை செய்யப்பட்ட அணில் பாண்டே தகப்பனார் பெயர் தினேஷ் பாண் பாண்டே மற்றும் தினேஷ்குமார் மற்றும் கொலையாளி குமாரின் மொபைல் போனை எடுத்து ஆத்திரமூட்டும் வகையில் கிண்டல் செய்து வந்ததால் ஆத்திரமடைந்த குமார் அணில் பாண்டே வன் தலையில் ஓங்கி அடிக்க பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து போலீசார் வழக்கு வந்து கொலையாளி குமாரை கைது செய்தனர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது..