தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கூறி ரூ.22 லட்சம் மோசடி – 2 பேர் மீது வழக்குபதிவு..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள காயம்பு நகரை சேர்ந்தவர் பார்த்திபன் .இவரது மகன் சரவணன் ( வயது 34) இவர் வாட்ஸ் அப்மூலம் கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் தொடர்பு கொண்டார். அவர்கள் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்கள். இதை நம்பி இவர் கடந்த 3 ஆண்டுகளில் ரூ 22 லட்சத்து 36 ஆயிரத்து 491 அனுப்பி வைத்தார் . எந்த லாபமும் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இந்த நிலையில் அந்த நிறுவனம் திடீரென்று மூடப்பட்டது. இது குறித்து சரவணன் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்கு பதிவு செய்து இந்த போலி நிறுவனத்தை நடத்தி வந்த விவேக், விஷ்ணு லிங்கம் ஆகியோரை தேடி வருகிறார் வருகிறார்..