வேகமாக வந்த லாரி பைக் மீது மோதி தந்தை பரிதாப பலி – 2 மகன்கள் படுகாயம்..

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குமாரபாளையம், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் ( வயது 36) விவசாயி. இவர் நேற்று தனது மகன்கள் ஆதிரன் ( வயது 7) பிரகதீஷ் ( வயது 6) ஆகியோருடன் பைக்கில் சேலம் – கொச்சி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஜல்லிக்கட்டு மைதானம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த மீன் பாரம் ஏற்றிய லாரி இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் . அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் பூபாலன் இறந்தார்.  மகன்கள் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து அவரது மனைவி சோபியா செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக மலப்புரம், ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன் ( வயது52 )கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது..