மழையால் பாதிக்கப்பட்ட கோவை… அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று நேரில் ஆய்வு.!!.

தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இன்று காலையில் விமானம் மூலம் கோவை வந்தார் . விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட வார்டு எண்:61,கள்ளிமடை கதிரவன் கார்டன் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்தார். அவருடன் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்,கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் (முன்னாள்எம்எல்ஏ.), கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன்,கணபதி ராஜ்குமார் எம்பி.,கோவை மாநகராட்சி மேயர் இரா.ரங்கநாயகி, மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் பெ.மாரிச்செல்வன், சிங்காநல்லூர் பகுதி-2 செயலாளர் சிங்கை மு.சிவா எம்.சி, 61 வது வட்டக் கழகச் செயலாளர் தென்னவர் செல்வம்,மாமன்ற உறுப்பினர் ஆதி மகேஷ்வரி திராவிட மணி எம்.சி.,கழக நிர்வாகிகள் உடன் சென்றனர்.