சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்ட கோவை ஒட்டல் அதிருக்கு சரமாரி தாக்குதல் – இளைஞர்கள் 3 பேர் கைது..!

கோவை :  ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடனையை சேர்ந்தவர் எட்வின் பிரான்சிஸ் (வயது 29) இவர் பீளமேடு காளப்பட்டி ரோட்டில் உள்ள நேரு நகரில் “மிலன் தோசா ஷாப்”என்ற பெயரில் ஒட்டல் நடத்தி வருகிறார். நேற்று காலையில் இவரது ஓட்டலுக்கு அதே பகுதியை சேர்ந்த 3 பேர் டிபன் சாப்பிட சென்றனர். சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கவில்லை. எட்வின் பிரான்சிஸ் பணம் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் அவரை சரமாரியாக தாக்கினார்கள். இதனால் ஓட்டல் அதிபர் எட்வின் பிரான்சிஸ் பயந்து அங்குள்ள பாத்ரூமில் சென்று கதவை பூட்டி கொண்டார் .பின்னர் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சேரன் மாநகர சேர்ந்த ஜெயக்குமார் (வயது 21 )நேரு நகர் ( மேற்கு) முருகேசன் ( வயது 21) பாலாஜி நகர் சஞ்சய் ( வயது 18 )ஆகியோரை கைது செய்தனர். மேலும்விசாரணை நடந்து வருகிறது.