ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாக்குகள் திருட்டு – வாலிபர் கைது..!

கோவை தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் திலகராஜ் ( வயது 47 ) இவருக்கு சொந்தமான வெற்றிலை பாக்கு பண்ணை உள்ளது. இங்கு பாக்குகளை மூட்டைகளில் அடைத்து விற்பனைக்காக வைத்திருந்தார். அதில் 5 பாக்கு மூட்டைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு 2 லட்சம் இருக்கும் .இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோவில் திருடிச் சென்ற பாக்கு மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆனைமலையை பக்கம் உள்ள பொன்னம்மாள் துறையைச் சேர்ந்த தினேஷ்குமார் (வயது 22) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து பாக்கு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.