ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட சர்வேயர் – கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..!

திருப்பூர் மாவட்டம் சேவூர் பிர்கா சர்வேயராக பணியாற்றி வருபவர் காளியப்பன் (வயது 54 ) இவர் அவிநாசி மேற்கு பிர்காவையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். அவிநாசியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) தனது நிலத்தை அளவீடு செய்ய விண்ணப்பித்துள்ளார் ..மணிகண்டனின் நிலத்தை காளியப்பன் அளவீடு செய்துள்ளார் .அதன் பிறகு சான்று வழங்க ரூ 10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். .இதை யடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். போலீசார் காளியப்பனை நேற்று கையும் களவுமாக கைது செய்தனர்.