கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.!!

கோவையில்உள்ள பள்ளி – கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று இரவு 10:30 மணிக்கு ” இமெயில் ” மூலம் ஒரு தகவல் வந்தது.அதில் விமான நிலையத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து விமான நிலையம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்)மெட்டல் டிடெக்டர்  மற்றும் துப்பறியும் நாய் மூலம் தீவிர சோதனை நடத்தினார்கள். நள்ளிரவு 12 மணி வரை இந்த சோதனை நடத்தப்பட்டது. பின்னர் இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.