கோவையில் அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டு வைத்தவர் கைது..!

கோவை சாய்பாபா காலனி போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று கே. கே .புதூர் மாநகராட்சி பள்ளிக்கூடம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள விநாயகர் கோவில் அருகே அனுமதி பெறாமல் ஒருவர் பிளக்ஸ் போர்டு வைத்துக் கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த அருண் சத்யா (வயது 30)என்பது தெரிய வந்தது.பிளக்ஸ் போர்டு பறிமுதல் செய்யப்பட்டது.