மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த தாய், மகள் எங்கோ மாயம்..!

திருவண்ணாமலை மாவட்டம் , மேல்செங்கம், பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் இவரது மனைவி யசோதை (வயது 80) மகள் பிரியா (வயது 39)இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும், மூத்த மகள் மீனா குமாரி சிகிச்சைக்காக கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆயுர்வேதிக் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்குள்ள கோவில் அருகே இருவரையும் உட்கார வைத்து விட்டு அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோருக்கு மருந்து வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது தாயார் யசோதை , தங்கை பிரியா ஆகியோரை காணவில்லை. எங்கோ மாயமாகி விட்டனர்.. இது குறித்து மீனா குமாரி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.