கடனை திருப்பி கொடுக்க முடியாததால் தூக்கு போட்டு கோவை வியாபாரி தற்கொலை..

கோவை அருகே உள்ள நஞ்சுண்டாபுரம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்பால் (வயது 56) வியாபாரி. இவர் தொழிலுக்காக கடன் வாங்கி இருந்தார். அந்தகடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜ்பால் .நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவரது மனைவி செல்வி போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..