2 வேன்கள் நேருக்கு நேர் மோதல் : டிரைவர் பரிதாப பலி – 3 பேர் படுகாயம்..

கோவை மதுக்கரை பக்கம் உள்ள நவக்கரையில் சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் நேற்று ஒரு பிக்கப் வேனும், டெம்போ டிராவல்ஸ் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பிக்கப் வேன் ஓட்டி வந்த சூலூர் செம்மாண்டம்பாளையம் பக்கம் உள்ள சேடபாளையத்தைச் சேர்ந்த பிரசாத் (வயது 25 )அதே இடத்தில் இறந்தார்.வேனில் பயணம் செய்த கேரள மாநிலம் தலைச்சேரி கண்ணூரைச் சேர்ந்த ஜாகிர் ( வயது 41) கர்நாடக மாநிலம் கோலாரைசேர்ந்த குமாரசாமி ( வயது 30)டிரைவர் மஞ்சுநாதன் ( வயது 37) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து கே.ஜி. சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக கர்நாடக  மாநிலம் கோலாறை சேர்ந்த டெம்போ டிராவல்ஸ் டிரைவர் மஞ்சுநாதன் (வயது 37 ) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.