பொள்ளாச்சியில் உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை- 2 வியாபாரிகள் கைது..!

தீபாவளி பண்டிகையையொட்டி உரிமம் பெற்றவர்கள் மட்டும் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும்.என்ற விதிமுறை உள்ளது . இதை மீறி பொள்ளாச்சி தெப்பக்குளம் பகுதியில் உரிமம்  இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பொள்ளாச்சி சி. டி .சி. காலனி,கோட்டூர் ரோட்டை சேர்ந்த சந்திரசேகர் (வயது 49 ) கைது செய்யப்பட்டார். ரூ1.5 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் பகுதியில் ஒரு கடையில் உரிமம் வாங்காமல் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பொள்ளாச்சி கடை வீதியை சேர்ந்த சுரேஷ் (வயது 56) கைது செய்யப்பட்டார். அங்கிருந்த ரூ1.5 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சோதனை நடந்து வருகிறது.