மணச்சநல்லூரில் எம்எல்ஏ-வை சந்தித்த நரிக்குறவர் இன மக்கள்..!

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார் கோவில் தெருவில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் 40 பேர் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள் . இவர்கள் வீடு கட்டிக் கொள்ள அரசு பட்டா வழங்கியிருக்கிறது. அந்தப் பட்டாவை எம்எல்ஏ கதிரவன் எங்களுக்கு பெற்றுக் கொடுத்தார் .அதுபோல் எங்கள் 40 குடும்பங்களுக்கும் குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்டி கொடுக்குமாறு எம்எல்ஏவிடம் நாங்கள் அனைவரும் முறையிட்டோம். அவரும் எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்டி கொடுக்க ஆவணம் செய்வதாக கூறியுள்ளார். எம்எல்ஏ கதிரவன் எங்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் கண்டிப்பாக குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்டி கொடுப்போம் என்று உறுதி அளித்ததால் எங்கள் குறவர் இன குடும்பத்தின் சார்பாக எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..