உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் திருச்சி ஆட்சியர் பங்கேற்பு.!!

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஸ்ரீகுரு திருமண மண்டபத்தில் முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, திட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி கள ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களுடனான ஆய்வினை மேற்கொண்டார்கள். இந்நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திஅப்துல் சமது , மாவட்ட வருவாய் அலுவலர் .ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  கங்கா தாரிணி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..