பைக்கில் இருந்து விழுந்து வாலிபர் பரிதாப பலி – நண்பர் படுகாயம்..

கோவை புட்டு விக்கி ரோட்டில் உள்ள ஆதி சக்தி நகரைச் சேர்ந்தவர் நித்தியானந்தன். இவரது மகன் சந்தீப் (வயது 18) இவரும் கோவை ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த நாகேந்திரன் மகன் தரணி ( வயது 18) என்பவரும்நண்பர்கள் ஆவார்கள்.இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் நேற்று சுங்கம். உக்கடம் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.பைக்கை தரணி ஓட்டினார். சந்தீப் பின்னால் இருந்தார்.அதி வேகமாகச் சென்றதால் பைக்கில் இருந்து இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சந்தீப் இறந்தார். பைக் ஓட்டிச் சென்று தரணி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பைக் ஓட்டிய தரணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.