பார் ஊழிரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு – வாலிபர் கைது..!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பக்கம் உள்ள வென்னியூரை சேர்ந்தவர்மகாலிங்கம் (வயது 28) இவர் கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலைபார்த்து வருகிறார் .நேற்று தனது நண்பர் வேணுவுடன்அங்குள்ள வள்ளியம்மாள் வீதி பூங்கா அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் மது குடிக்க பணம் கேட்டார் இவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 1250 ரூபாயை பறித்துவிட்டுதப்பி ஓட முயன்றார். அவரை மகாலிங்கம்.அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து ராமநாதபுரம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம், செல்வன் மகன் ஆகாஷ் (வயது 21) என்பது தெரிய வந்தது . கத்தியும்,௹. 1250 பணமும்பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..