நகைத் தொழிலாளி ரத்த காயத்துடன் மர்ம மரணம் – போலீசார் விசாரணை.!!

கோவை இடையர் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 42) நகை தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது .குழந்தைகள் இல்லை . இந்த நிலையில் ராமச்சந்திரன் நேற்று இடையர் வீதியில் உள்ள ஒரு கடை முன் தலையில் ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி குருலட்சுமி ( வயது 40) வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..