தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை – 4 பேர் கைது..!

கோவை கவுண்டம்பாளையம் போலீசார் நேற்று சங்கனூர் பகுதியில் ரோம் சுற்றி வந்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்றதாக ரத்தினபுரி,புது தோட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 34) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 15 லாட்டரி டிக்கெட்களும், பணம் ரூ 8, 300 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல செல்வபுரம் வடக்கு ஹவுசிங்யூனிட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக வடக்குஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சபிக் ரகுமான் ( வயது 26) ஹபிப்ரகுமான் ( வயது 54) சம்சுதீன் ( வயது 23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து இருந்து லாட்டரி டிக்கெட்டுகள்,இருசக்கர வாகனம்பறிமுதல் செய்யப்பட்டது.