அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு இளைஞர் தற்கொலை..

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பொன்ராஜ் (வயது 22) எல்.இ.டி. ஸ்கிரீன் ஆபரேட்டர்.குடிப்பழக்கம் உடையவர்.இதைபெற்றோர்கள் கண்டித்தனர் இதனால் ஆத்திரமடைந்த பொன்ராஜ் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் அளவுக்கு அதிகமாக 10 தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து தந்தை ஆறுமுகம் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..