தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை- பெண் கைது..!

கோவை கிணத்துக்கடவுபோலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருமலைச்சாமி நேற்று அங்குள்ளகோவில் பாளையம், பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநிலலாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததாக கிணத்துக்கடவு சந்தேகவுண்டன் பாளையத்தை சேர்ந்த குமரேசன் மனைவி செல்வி ( வயது 35) என்பவரை கைது செய்தார். இவரிடம் இருந்து 686 லாட்டரி டிக்கெட்பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.