திருமணமான 10 மாதத்தில் மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை பரிதாப பலி..

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் . இவரது மகன் டாமிஸ் ( வயது 19) இவரது மனைவி ஸ்ரீமதி (வயது 18).இவர்களுக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. கணவன் மனைவி இருவரும் துடியலூர் ஜி.என். மில் பகுதியில் வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் உள்ள டேபிள் மின்விசிறி பழுதடைந்து இருந்தது. இதை டாமிஸ் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தார்..இதுகுறித்து மனைவி ஸ்ரீமதி துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..