குடித்து விட்டு வந்ததை கண்டித்த மனைவியை ஹெல்மெட்டால் தாக்கிய கணவர் கைது..!

கோவை புலியகுளம், அம்மன் குளம், நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஆனந்த முருகன் (வயது 47) இவரது மனைவி லட்சுமி (வயது 41) இவர்களுக்கு திருமணம் ஆகி 16ஆண்டுகள் ஆகிறது. லட்சுமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஆனந்த முருகன் குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வார். இந்த நிலையில் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அதை லட்சுமி கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த முருகன் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் மனைவியின் தலையில் அடித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த அவரது மகன்,|மகள் ஆகியோரையும் தாக்கினார் . இது குறித்து லட்சுமி, ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கணவர் ஆனந்த முருகனை நேற்று கைது செய்தனர். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் , தாக்குதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..