கோவை வங்கியில் தங்க முலாம் பூசப்பட்ட நகையை அடகு வைத்து ரூ.2.29 லட்சம் மோசடி.!!

கோவை காந்திபுரம்,100 அடி ரோடு, டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேல்முருகன் என்பவர் 47.50 கிராம் எடை கொண்ட நகைகளை அடகு வைத்து ரூ2 லட்சத்து 29 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்த நகைகளை ஆய்வு செய்தபோது அது தங்க முலாம் பூசப்பட்டபோலி நகைகள் என்பது தெரிய வந்தது. இது குறித்து அந்த வங்கியின் மேனேஜர் கார்த்திக் காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வேல்முருகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..