கோவை பிரபல வணிக வளாகத்தில் திருட்டு – பெண் கைது..!

கோவை ஆர். எஸ் புரம். புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில். ஷோரூமில் இருந்த 3 பேண்ட்கள், ஒரு கைப்பை திருடுப் போனது. இது தொடர்பாக அந்த கடையின் மேனேஜர் ஆகாஷ் ஆர் .எஸ் . புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் சண்முக தேவர் வீதியை சேர்ந்த வேல்முருகன் மனைவி தீபா (வயது 49) என்பவரை கைது செய்தார். 3 பேண்ட் ஒரு கைப்பை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..