கோவை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – தங்கும் விடுதி உரிமையாளர் நள்ளிரவில் கைது.!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை… பெண்கள் தங்கும் விடுதி உரிமையாளர் நள்ளிரவில் கைது…

கோவை பீளமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இதில் ஏராளமான வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் தங்கி உள்ளனர். இந்த விடுதியை ராஜ்குமார் என்பவர் நடத்தி வருகிறார். நேற்றைய தினம் இவர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவரை தனது காரில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அந்த மாணவிக்கு அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில், நேற்று இரவு விடுதிக்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது குறித்து விடுதி உரிமையாளர் ராஜ்குமாரிடம் கேட்டனர். அப்பொழுது வாக்குவாதம் ஏற்படவே ராஜ்குமாரை தாக்கிய மாணவியின் பெற்றோர் அவரை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் கந்தசாமி இது தொடர்பாக விசாரணை நடத்தினார். விசாரணையில் மாணவிக்கு விடுதி உரிமையாளர் ராஜ்குமார் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். இவர் அந்த தங்கு விடுதியில் வேறு எந்த பெண்களுக்காவது பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. விடுதி உரிமையாளர் ராஜ்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..