கோவை நகைக்கடை அதிபரிடம் ரூ.69 லட்சம் நகை மோசடி- 3 பேருக்கு வலைவீச்சு..!

கோவை கடைவீதி பக்கம் உள்ள கே.சி. தோட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 42) இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் குடட்கர், தீ ராஜ்,சியாம் ஆகியோர் 28- 12 – 22 முதல் 30, 6 -23 வரை 1099.995 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் வாங்கினார்கள். இதன் மதிப்பு ரூ 69 லட்சத்து 12 ஆயிரத்து 658 ஆகும். இந்த நகைகளுக்கு ரூ 11 லட்சத்து 22 ஆயிரத்து 308 மட்டும் கொடுத்துள்ளனர். மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள் . இது குறித்து சண்முகராஜா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை நடத்தி கர்நாடக மாநிலம் கோப்பால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் குடட்கர் , திராஜ் , சியாம் ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவின் கீழ்வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..