கோவை கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

கோவை பொன்னையராஜபுரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் தர்மேந்திரா குப்தா.பாப்பநாயக்கன்பாளையத்தில் மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் . இவரது மகள் காலாஷ் குப்தா ( வயது 20) பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21 பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது கடைக்கு வந்தவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தர்மேந்திரா குப்தா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..