வீட்டிலிருந்த 7 பவுன் நகைகள் திருட்டு – வேலைக்காரி மூதாட்டிக்கு வலைவீச்சு..!

கோவை வீரகேரளம் பொங்காளியூர் ரோட்டில் உள்ள ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் முத்துக்குமார். இவருடைய மனைவி மல்லிகா (வயது 39) இவரது வீட்டில் 65 வயது மூதாட்டியை வேலைக்கு வைத்திருந்தார் . அவர் மல்லிகா வீட்டில் இல்லாத போது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டார் . இது குறித்து மல்லிகா வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..