கோவிலின் பூட்டை உடைத்து சாமி நகைகள் திருட்டு – மர்ம ஆசாமிகள் கைவரிசை..!

கோவை விளாங்குறிச்சி பகுதியில் அருள்மிகு நீலி அம்மன் திருக்கோவில் . சம்பவத்தன்று இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 12 கிராம் எடை கொண்ட சாமி நகைகள், 2 குத்துவிளக்கு ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாக குழு தலைவர் நந்தகோபால் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..