உரிமம் பெறாமல் மளிகை கடையில் பட்டாசு விற்பனை.- கோவை வியாபாரி கைது..!

கோவை சரவணம்பட்டி அஞ்சுகம் நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் உரிமம் பெறாமல்பட்டாசுகள் விற்பனை செய்வதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான பட்டாசுகள் விற்பனைவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஇவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. .இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர் பெரியசாமி (வயது 49) கைது செய்யப்பட்டார். பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.