கல்லூரியில் சீனியர் – ஜூனியர் இடையே கோஷ்டி மோதல்… கல்லூரி மாணவர் படுகாயம்..!

தேனி மாவட்டம் பங்களா மேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் . இவரது மகன் ராகுல் ( வயது 18) இவர் பீளமேடு பகுதியில் தனியார் கல்லூரியில் பி காம் ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ராமநாதபுரம் சௌரிபாளையம் ரோட்டில் உள்ள அண்ணா நகரில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் படிக்கும் கல்லூரியில் சீனியர் – ஜூனியர் மாணவர்களிடையே தகராறு இருந்து வந்தது . இந்த நிலையில் இவரை 8 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. இதில் இவர் காயம் அடைந்தார். சிசிக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அதே கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வரும் ராகுல் காந்தி, கெவின் சதீஸ் உட்பட 8 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..