மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாப பலி..

கோவை பீளமேடு சித்ரா, அழகு நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44) நேற்று அவரது வீட்டின் முன் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது மனைவி சுகுணா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..