திருச்சியில் மின்சாரம் பாய்ந்த மின் ஊழியர் உயிருடன் மீட்பு..!

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு மின்மாற்றியில் பிற்பகல், மின்வாரிய ஊழியா் ஒருவா் இணைப்புகளை சரிசெய்து கொண்டிருந்தாா். அப்போது, அவரது கால் மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் காலில் பலத்த தீக்காயமடைந்த அவா் கீழே இறங்க முடியாமல் மின்கம்பத்திலேயே சாய்ந்த நிலையில் தொங்கினாா். இதை கண்ட சக ஊழியா்கள் மின் இணைப்பைத் துண்டித்து, காயமடைந்த ஊழியரை மீட்டனா். பிறகு அவரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இச்சம்பவத்தை அப்பகுதியில் இருந்த கைப்பேசியில் பதிவுசெய்து சமூகவலைதளத்தில் பரப்பினா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமாா் 3 மணி நேரம் மின்விநியோகம் தடைபட்டது. மின்சாரம் தாக்கப்பட்டதால் காயம் அடைந்த மின் ஊழியர் காப்பாற்றப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.